வில்கமுவ பிரதேச சபைத் தலைவர் ஜயந்த வீரசேகர வைத்தியசாலையில்

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதலில் காயமடைந்த வில்கமுவ பிரதேச சபைத் தலைவர் ஜயந்த வீரசேகர வில்கமுவ - ஹெட்டிபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வில்கமுவ - ஹந்துன்கமுவ பகுதியில் இன்று (11) பகல் இடம்பெற்ற ´திவிநெகும´ திட்டத்தில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிளைடால் வெட்டப்பட்டதாகக் கூறப்படும் வெட்டுக் காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் ஹெட்டிபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரதேச சபைத் தலைவரை தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 2.30 அளவில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலுடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :