சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரத்தில் இருந்து சமிக்ஞை ஒலி எழுப்பப்பட்டதால்-மக்கள் பதற்றம்

புத்தளம் - உடப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரத்தில் இருந்து சமிக்ஞை ஒலி எழுப்பப்பட்டதால் பிரதேச மக்கள் சிறிதுநேரம் அல்லோல கல்லோலப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று (01ம் திகதி) காலை 10.21ற்கு இரண்டு தடவைகள் சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரத்தில் இருந்து சமிக்ஞை ஒலி எழுப்பப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

எனினும் இயந்திர கோளாறு காரணமாக குறித்த சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரத்தில் இருந்து சமிக்ஞை இயந்திரம் தானியங்கியுள்ளதாக புத்தளம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பிரதானி கேணல் ரணவீர தெரிவித்தார்.

இது குறித்து உடப்பு பொலிஸார் மற்றும் கடற்படையினர் பொது மக்களுக்கு தெரிவுபடுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :