கல்முனை மாநகர சபை உறுப்பினர் வீட்டில் குண்டு வீச்சு, படங்கள்.



( எம்.எம். கடாபி )

ல்முனை மாநகர சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்
ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ்வின் வீட்டின் மீது இன்று திங்கட்கிழமை அதிகாலை
1.30 மணியளவில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார்
தெரிவித்தனர்.

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட வெடிபொருட்களை பயன்படுத்தியே இந்தத் தாக்குதல்
மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மத்ரஸா வீதியில் அமைந்துள்ள தனது வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட இந்தத்
தாக்குதலின்போது வீட்டின் யன்னல் கண்ணாடிகளும் நீர்க்குழாய் இணைப்பும்
சேதமடைந்துள்ளதுடன், வீட்டுச் சுவர்களிலும் நுழைவாயில் கதவிலும்
துவாரங்கள் ஏற்பட்டுள்ளதாக கல்முனை மாநகர சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல்ச் சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸில் முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :