மாகாண சபைகளில் 13 குறித்த பிரேரணையை கடுமையாக எதிர்ப்போம்-ஹஸன் அலி


13 ஆவது திருத்தச் சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்கு அங்­கீ­காரம் வழங்கும் வகையில் கிழக்கு மாகாண சபையில் பிரே­ரணை முன்­வைக்­கப்­படும் போது அதனை சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் எதிர்க்கும். அத்­துடன் வாக்­கெ­டுப்பின் போது எமது கட்­சியின் உறுப்­பி­னர்கள் பிரே­ர­ணைக்கு எதி­ரா­கவே வாக்­க­ளிப்­பார்கள் என்று அக்­கட்­சியின் செய­லா­ளரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ரீ.ஹசன் அலி தெரி­வித் தார்.

இதேபோல் மேல் மாகா­ண­ச­பையில் இந்தப் பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­ப­டும்­போதும் எமது உறுப்­பி­னர்கள் அதற்கு எதி­ரா­கவே வாக்­க­ளிப்­பார்கள். 13 ஆவது திருத்தச் சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்கு அனு­ம­திக்க முடி­யாது என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

13 ஆவது திருத்தச் சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்ளும் வகையில் மாகா­ண­ச­பை­களின் அங்­கீ­கா­ரத்தை பெறும் நட­வ­டிக்­கையில் அர­சாங்கம் ஈடு­பட்­டுள்­ளது. இது­வரை வடமேல் மாகா­ண­சபை, தென்­மா­கா­ண­சபை, வட­மத்­திய மாகா­ண­சபை , சப்­பி­ர­க­முவ மாகா­ண­சபை, மத்­திய மாகா­ண­சபை மற்றும் ஊவா மாகாண சபை­களில் இந்தப் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன.

மேல்­மா­கா­ண­சபை மற்றும் கிழக்கு மாகா­ண­சபை என்­ப­வற்றில் அடுத்­த­வாரம் அளவில் இந்தப் பிரே­ரணை முன்­வைக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. இந்த நிலை­யி­லேயே முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் ஹசன் அலி மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்:-

குறித்த பிரே­ரணை கிழக்கு மற்றும் மேல் மாகா­ணங்­களில் வாக்­கெ­டுப்­புக்கு விடப்­படும் போது, முஸ்லிம் காங்­கிரஸ் அந்த வாக்­கெ­டுப்பை புறக்­க­ணிக்கும் என்று செய்­திகள் வெளி­யா­கி­யுள்­ளன. அதில் எவ்­வித உண்­மையும் இல்லை. நாம் இப் பிரே­ர­ணையை முற்­றாக எதிர்த்­து­வரும் நிலையில் கடந்த புதன்­கி­ழமை வடமேல் மாகாண சபையில் கட்­சியின் நிலைப்­பாட்­டுக்கு புறம்­பாக இரண்டு உறுப்­பி­னர்கள் ஆத­ரித்து வாக்­க­ளித்­துள்­ளனர். இதன்­கா­ர­ண­மாக அவர்­களை நாம் தற்­கா­லி­க­மாக கட்­சி­யி­லி­ருந்து இடை­நி­றுத்­தி­யுள்ளோம். கிழக்கு மற்றும் மேல் மாகா­ணங்­களில் வாக்­கெ­டுப்பை புறக்­க­ணித்­து­விட முடி­யாது. எல்லா சந்­தர்ப்­பங்­க­ளிலும் ஒரே நிலைப்­பாட்­டையே கடை­பி­டிக்க வேண்­டி­யுள்­ளது.

குறித்த பிரே­ரணை அடுத்­த­வா­ர­ம­ளவில் மேல் மாகாண சபையில் வாக்­கெ­டுப்பு விடப்­ப­டலாம் என எதிர்­பார்க்­க­டு­கின்­றது. மேல் மாகா­ணத்தில் முஸ்லிம் காங்­கிரஸ் சார்பில் முன்று மக்கள் பிர­தி­நி­திகள் உள்­ளனர். அவர்கள் குறித்த பிரே­ர­ணையை எதிர்த்து வாக்­க­ளிப்பர்.

அத்­தோடு கிழக்கு மாகாண சபையின் கடந்த சில அமர்­வுகள் சீராக இடம்­பெ­ற­வில்லை. 13 ஆவது திருத்தம் தொடர்­பி­லான குறித்த திருத்த பிரே­ரணை கிழக்கு மாகாண சபையின் அங்­கீ­கா­ரத்­தைப்­பெற வேண்­டி­யுள்­ளது. அவ்­வாறு பிரே­ரணை கொண்டு வரப்­பட்டு வாக்­க­ளிப்­புக்கு விடப்­பட்டால் மு.கா கட்­டாயம் எதிர்த்தே வாக்களிக்கும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :