உயிரிழந்த டாக்டர் ஜயலத் ஜயவர்தனவின் வெற்றிடத்திற்கு அஜித் மானப்பெரும.


யிரிழந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தனவின் வெற்றிடத்திற்கு அஜித் மானப்பெரும நியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

2010ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் அஜித் மானப்பெரும, டாக்டர் ஜயலத் ஜயவர்தனவுக்கு அடுத்தபடியாக கம்பஹா மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.

எனவே ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தனின் இடத்திற்கு அஜித் மானப்பெருமவை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சிங்கப்பூரில் உயிரிழந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தனவின் பூதவுடல் இன்று (30) மாலை இலங்கைக்கு எடுத்துவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

சுகயீனமுற்று சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த டாக்டர் ஜயலத் ஜயவர்தன இன்று (30) காலை காலமானார்.

இவரது இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஜூன் மூன்றாம் திகதி ஜா-எல வெலிகம்பிட்டியவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -