
உகண்டா சென்றுள்ள ஜனாதிபதிக்காக காத்திருக்கும் முஸ்லிம் காங்கிரஸ்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
மின் கட்டண உயர்வு, வட மாகாண சபை தேர்தல் மற்றும் 19வது திருத்தச் சட்டம் என்பன பற்றி இதன்போது கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் தெரிவித்தார்.
விசேடமாக நாட்டில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து ஜனாதிபதியின் நேரடி கவனத்திற்கு கொண்டுவரப்படும் என அவர் குறிப்பிட்டார்.
உகாண்டா சென்றுள்ள ஜனாதிபதி நாடு திரும்பியதும் சந்திப்புக்கான திகதி பெறப்படும் என அவர் கூறினார்.
0 comments :
Post a Comment