பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் உட்பட 50பேர் காயம்.

ஸ்கெலியா, பிரவுன்ஸ்விக் தோட்டப் பகுதியில் தனியார் பஸ்ஸொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் உட்பட 50ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்தில் காயங்களுக்குள்ளான 50 பேர் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டபோதும் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாக மஸ்கெலிய மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி எம்.கணேஷ் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்களில் சுமார் 45 மாணவர்கள் அடங்குவதுடன் ஆசிரி்யர்கள் மற்றும் பொதுமக்கள் சிலரும் அடங்குவதாக மாவட்ட வைத்திய அதிகாரி கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :