கொள்ளுப்பிட்டியில் 50 ரூபாவை பிக்பொக்கட் அடித்த ஒருவர் 10 வருடங்களுக்கு பின்னர் விடுதலை.

கொள்ளுப்பிட்டியில் வைத்து பெண்ணொருவரிடம் 50 ரூபாவை பிக்பொக்கட் அடித்த ஒருவர் 10 வருடங்களுக்கு பின்னர் விடுதலைச்செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அவரை விடுதலைச்செய்துள்ளது.

அக்குரஸ்ஸையை சேர்ந்த இந்திக்க மதுரங்க என்பவரையே கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இவ்வாறு விடுதலைச்செய்துள்ளார்.

இவர் மீதான குறித்த வழக்கு கடந்த 10 வருடங்களாக இழுப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன் பிணை நிபந்தனைகளை மீறியமைக்காக கடந்த 3 மாதங்களாக தடுப்பு காவலிலும் அவர் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நீதிமன்றத்தில் ஆஜராகததையடுத்து அவருக்கு எதிராக நீதிமன்றத்தினால் பல முறை பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

 இந்த நிலையிலேயே மேற்படி வழக்கில் விசேட கவனத்தை செலுத்திய கொழும்பு நீதவான் அவரை எச்சரித்து விடுதலைச்செய்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :