கல்முனை பொலிஸ் நிலையத்தினால் நடமாடும் செயலகம்

(அகமட் எஸ் முகைடீன்)

கல்முனை பொலிஸ் நிலையத்தினால் நடமாடும் செயலகம் பெரிய நீலாவணை சுனாமி வீட்டுத்திட்டத்தில் திறந்துவைக்கப்பட்டு இரண்டு வாரங்களாக இப்பிரதேச மக்களின் தேவைகளை நிறைவேற்றிவருகின்றது.

கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்த நாணயகார தலைமையில் இன்று (26.02.2013) நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப்இ அதிதிகளாக மாநகர ஆணையாளர் ஜே.லியாகத்அலிஇ பொறியியலாளர் ஹலீம் ஜௌசிஇ கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே.லவநாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது நீலாவணை சுனாமி வீட்டுத்திட்ட வாழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

குறிப்பாக இவ்வீட்டுத் திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர்த்தொட்டி சீராக இயங்காமையினால் இப்பிரதேசத்தில் துர்நாற்றம் வீசுவதாக தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முதல்வர் நேரில் சென்று பார்வையிட்டு அதனை சுத்திகரிப்பதற்கு பணிப்புரைவிடுக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டது. அத்தோடு இப்பிரச்சினை தொடர்ச்சியாக இருப்பதனால் இதற்கான நிரந்தர தீர்வினையும்  மிகவிரைவில் பெற்றுத்தருவதாக முதல்வர் தெரிவித்தார்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :