அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 2013 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிப்பும் அது தொடர்பான விவாதமும் எதிர்வரும் 2012.12.26 ஆம் திகதி புதன்கிழமை காலை 10.00 மணிக்கு பிரதேச சபைக் கூட்ட மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக செயலாளர் ஏ.அப்துல் சித்திக் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் தலைமையில் நடைபெறவுள்ள சபை அமர்வில் தவிசாளரினால் வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இச்சபை அமர்வில் சகல உறுப்பினர்களும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை முன்வைக்கவுள்ளனர். அத்தோடு சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இச்சபையில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பாக 7 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக 2 உறுப்பினகர்களும் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வமர்வுக்கு சகல பிரதேச சபை உறுப்பினர்களும் குறித்த நேரத்துக்கு கலந்து கொள்ளுமாறு பிரதேச சபை செயலாளர் ஏ.அப்துல் சித்திக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
0 comments :
Post a Comment