இளம் பாரதி ஜே.சுல்தானா பர்வின் அவர்களுக்கு இலங்கையிலிருந்து கிடைத்த துணிந்தெழு விருது!



சிறந்த ஆளுமையுடையவர்களை கௌரவிக்கும் நோக்கில் ஸ்கை தமிழ் ஊடகத்தினால், 2022ஆம் ஆண்டிற்கான துணிந்தெழு எனும் விருது தெரிவு செய்யப்பட்ட ஆளுமையுடையவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் சிறுவயதிலிருந்தே எழுத்தாற்றல் மற்றும் பேச்சாற்றலை வெளிக்காட்டி இந்தியாவில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனக்கென தனித்துவமான இடத்தைப் பிடித்து தன் பேச்சாற்றலால் உலகை திரும்பிப் பார்க்கச் செய்து,உலகில் பிரசித்தி பெற்று மிளிர்ந்து கொண்டிருக்கும் பிரபல தென்னிந்திய பட்டிமன்ற,மேடை பேச்சாளர், இளம் பாரதி ஜே.சுல்தானா பர்வின் அவர்களுக்கு 2022ம் ஆண்டிற்கான துணிந்தெழு விருதை ஸ்கை தமிழ் ஊடகம் அண்மையில் வழங்கி கௌரவித்தது.

இவ்விருதினை பெற்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக சுல்தானா பர்வின் அவர்கள் தனது முகநூல் வாயிலாக காணொளி மூலம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன் துணிந்தெழு நிர்வாகத்திற்கு தனது நன்றியையும் தெரிவித்திருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :