சாய்ந்தமருது அல் - ஹிலால் வித்தியாலயத்தில் இடம்பெற்ற பாராட்டி, கௌரவிக்கும் நிகழ்வு



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
சாய்ந்தமருது அல் - ஹிலால் வித்தியாலயத்தில் ஓய்வுபெற்ற அதிபர் ஐ.எல்‌.ஏ.மஜீதின் ஓய்வு நிலையைப் பாராட்டி, கௌரவிக்கும் நிகழ்வும் மற்றும் வித்தியாலயத்திலிருந்து பிரியாவிடை பெற்றுச் சென்ற முன்னாள் அதிபர் எம்.எஸ்.எம். பைசாலை கௌரவிக்கும் நிகழ்வும் மிகச் சிறப்பான முறையில் பாடசாலை ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் யு.எல். நஸார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கல்முனை கல்வி மாவட்ட பொறியியலாளர் ஏ.எம். சாகிர் கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக கல்முனை கல்வி வலய கணக்காளர் ஹபிபுல்லா, விசேட அதிதியாக முன்னாள் அதிபர் ஐ.எல்.ஏ. மஜீதின் புதல்வர் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அஸ்லம் சஜா மற்றும் வலயக் கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பிரதி அதிபர் றிப்கா அன்ஸார், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள் உட்பட மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :