பாடசாலைகள் எப்போது ஆரம்பம்? கல்வி அமைச்சர் இன்று வெளியிட்ட தகவல்


M.I.M.இர்ஷாத்-

பாடசாலைகளை எதிர்வரும் 23ஆம் திகதி மீண்டும் திறப்பது குறித்து இன்னும் இறுதிமுடிவை எடுக்கவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை காலை நடந்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அங்கு உரையாற்றிய அவர், “கடந்த 9ஆம் திகதி அரச பாடசாலை மாணவர்களின் மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கவிருந்தன.

 எனினும் நாட்டில் தற்போது உள்ள நிலைமைகளுக்கு அமைய எதிர்வரும் 23ஆம் திகதி பாடசாலைகளை திறக்க உத்தேசிக்கப்பட்டிருந்தது. 

இருந்த போதிலும் தற்போது உள்ள சூழ்நிலைகளை ஆராய்ந்து இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக கல்விமான்கள், மருத்துவத்துறையினருடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. இதன் பின்னரே இறுதித்தீர்மானம் எடுக்கப்படும்” என்று கல்வி அமைச்சர் கூறினார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :