என் சகோதரன் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட போது விடுதைப்புலிகளை அழித்து தமிழ் முஸ்லிம் மக்களுக்கு நின்மதியான வாழ்வை வழங்க வேண்டும் என்றும் கிழக்குவாழ் மக்களின் இறைமையை மீறிய வடகிழக்கு இணைப்பை பிரித்து தரவேண்டும் எனவும் கோறியிருந்தார் அதனை அன்று ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட அதிமேதகு மஹிந்த ராஜபக்ச நிறைவேற்றிக் கொடுத்தார்.
இன்று என்னிடம் இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கை காப்பற்றுவதோடு சிறுபான்மையாக வாழுகின்ற தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்களை வாழவைக்கின்ற பொறிமுறையை கொண்டுவந்து அவர்களது முகங்களில் அச்சமின்மையையும் நின்மதியையும் மலர்ந்திடச் செய்யவேண்டும் என கோரியுள்ளார்.
அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று தேசிய காங்கிரஸ் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாவுக்கு ஆதரவு வழங்கும் நிகழ்வில் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையிலான மீயுயர்சபை உறுப்பினர்களின் சந்திப்பில் தெரிவித்தார்