சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமால் இன்று சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் வாகனம் ஒன்று வழங்கப்பட்டது.
அந்த வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் வாகனம் ஒன்று வழங்கப்படும் என்று பைசல் காசிம் அண்மையில் வழங்கிய வாக்குறுதிக்கு அமையவே இன்று அது வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் சுகாதார அமைச்சால் நாட்டில் உள்ள மேலும் பல வைத்தியசாலைகளுக்கும் இன்று அம்பியூலன்ஸ் வாகனங்கள் வழங்கப்பட்டன.சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்ஐ.எல்.எம்.மாஹிர்
மற்றும் ஏனைய அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.