மனைவியுடன் பிரச்சனையால் குழந்தையை அடித்துக்கொலை செய்த கடற்படை சிப்பாய்..


ஒரு வயது மற்றும் நான்கு மாதம் நிறைந்த தனது பெண் குழந்தையை தந்தை, கை மற்றும் காலால் அடித்து - உதைத்து கொலை செய்த கொடூர சம்பவமொன்று பதிவாகியுள்ளது. 

பிலியந்தல மொரதன பிரதேசத்தில் வசிக்கும் இலங்கை கடற்படையில் பணிபுரியும் ஒருவரே இக்கொலையை புரிந்துள்ளார். 

நேற்று (03) இரவு இவரது வீட்டில் கணவன் - மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் கடும் ஆத்திரமடைந்த தந்தை தனது பெண் குழந்தையை அடித்து - உதைத்து கொலை செய்துள்ளார். 

தாக்குதலில் மூச்சுப்பேச்சை இழந்த குழந்தை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :