புரவலர் ஹாஷிம் உமரின் பங்களிப்புடன் கவிதாயினி நதீரா வசூகின் நூல் வெளியீட்டு விழா



ல்கஸ்பிட்டி முஸ்லிம் மகா வித்யாலயத்தில் கவிதாயினி நதீரா வசூக் அவர்களின் நூல் வெளியீட்டு விழா அண்மையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் போது பாடசாலை வாசிகசாலைக்கு ஒரு தொகை நூல்கள் வழங்கப்பட்டன.

விழாவின் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ஹாசிம் உமர் பவுண்டேஷனின் நிறுவனர், சமூக சேவையாளர் ஹாசிம் உமர் அவர்கள், குறித்த நூல்களை பாடசாலை அதிபரிடம் கையளித்து வைத்தார். கல்வி மற்றும் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்நூல் வழங்கல் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான என். எம். அமீன் மற்றும் சித்தீக் ஹனிபா ஆகியோரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். நூல் வாசிப்பின் அவசியம் மற்றும் மாணவர்களின் அறிவு வளர்ச்சியில் வாசிகசாலைகளின் பங்கு குறித்து இந்நிகழ்வில் கருத்துக்கள் பகிரப்பட்டன.

இந்நிகழ்வு மாணவர்களிடையே இலக்கிய ஆர்வத்தை வளர்க்கும் வகையில் அமைந்ததாகப் பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :