ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்தவருக்கு ஒரு வருட சிறைத்தண்டனை!



வி.ரி. சகாதேவராஜா-
ஸ் போதைப் பொருளை வைத்திருந்த சம்பவத்தில் குற்றவாளியான நபர் ஒருவருக்கு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.ஹம்சா சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் .

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 70 வயதுடையவர் 9 கிராமும் 850 மில்லி கிராமும் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த 3 மாதங்களாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார் ,

அவரது அடையாள மற்றும் தண்டனைத் தீர்ப்புக்காக நேற்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
இதன் போது இவருக்கு ஒருவருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது

முதல் 6 மாத கடுழிய சிறைத் தண்டனையும் மிகுதி 6 மாத காலச் சிறைத் தண்டனை7 வருட காலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதுடன் ருபா 10 000.00 தண்டப் பணமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :