இளைஞர் பாராளுமன்ற வெளிவிவகார பிரதியமைச்சர் அஹ்மத் சாதிக் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலய அதிகாரியை சந்தித்தார்.



நூருல் ஹுதா உமர்-
ளைஞர் பாராளுமன்றத்தின் வெளிவிவகார மற்றும் இராஜதந்திர உறவுகளின் பிரதி அமைச்சர் அஹ்மத் ஸாதிக், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முப்தி ஆகியோருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் இரண்டாவது செயலாளலர் (அரசியல்) ஆயிஷா அபுபக்கர் ஃபஹாத் அவர்களுக்குமான சந்திப்பொன்று பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில், இலங்கையின் கல்வி, விளையாட்டு, கலாச்சாரம் போன்றவற்றில் இளைஞர்களின் பங்களிப்பு தொடர்பாகவும் மேலும் அதில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் இத்துறைகளில் இலங்கை இளைஞர்கள் முன்னேற பாகிஸ்தான் இளைஞர்களின் பங்களிப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.கலந்துரையாடலின் போது இலங்கையின் விளையாட்டுத்துறை மேலும் வளர்வதற்கான தேவைப்பாடுகள் குறித்தும் விசேடமாக களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு விளையாட்டு துறையின் வளர்ச்சிக்கு உயர்ஸ்தானிகராலயத்தின் ஆதரவினை எதிர்காலங்களில் வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதன் போது கருத்து தெரிவித்த பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் இரண்டாவது செயலாளலர் (அரசியல்) ஆயிஷா அபுபக்கர் ஃபஹாத், இலங்கை பாகிஸ்தானுக்கு இடையிலான உறவு மேலும் இளைஞர்களின் ஊடாகவும் வலுப்படுத்த சிறந்த நடவடிக்கைகள் எதிர்காலங்களில் எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :