சுதந்திர தினத்தில் பொலிஸ் நிலையத்திற்கு தென்ன மரக்கன்றுகள் வழங்கல்



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்றது.

மட்டக்களப்பபு மாவட்டத்தின் கல்குடா தேர்தல் தொகுதிகளிலும் அரச திணைக்களங்கள் மற்றும் பொது அமைப்புக்களினாலும் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றது.

அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேசத்தில் சமூக செயற்பாட்டாளரும், அரசியல் பிரமுகருமான கலாநிதி எம்.பீ.முஸம்மில் தலைமையில் நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது.

இதன்போது தேசிய கொடியேற்றி சுதந்திர தின நிகழ்வு இடம் பெற்றதோடு, நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த முப்படை வீரர்களுக்காக இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், நான்கு மதத்தவர்களின் இறைவணக்கம் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்ட நான்கு மதத்தினை சேர்ந்த சிறார்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், கல்குடாத் தொகுதியிலுள்ள வாழைச்சேனை, கல்குடா, சந்திவெளி, ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கும், மற்றும் மத தலைவர்களுக்கும் தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில்; ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவாராஜா, மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தினேஸ் கருணாநாயக்க, வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.டீ.டீ.நிலங்க, வாழைச்சேனை, கல்குடா, சந்திவெளி, ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், மதத் தலைவர்கள், பிரமுகர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :