கொழும்பு 12 பீர்சாகிப் ஜூம்ஆப் பள்ளிவாசலின் நலன்புரிச்சங்கம், நியாஸ் மௌலவி பவுண்டேசன் மற்றும் இஹ்ஸானிய அரபுக் கல்லூரியும் இணைந்து 74 வது சுதந்திரதின நிகழ்வு



ஏ.எஸ்.எம்.ஜாவித்-
லங்கையின் 74 வது சுதந்திர தின நிகழ்வினை கொழும்பு 12 பீர்சாகிப் ஜூம்ஆப் பள்ளிவாசலின் நலன்புரிச்சங்கம், நியாஸ் மௌலவி பவுண்டேசன் மற்றும் இஹ்ஸானிய அரபுக் கல்லூரியும் இணைந்து அறபுக் கல்லூரியின் பணிப்பாளர் லமீர் ஹாபிஸ் ஹரத் தலைமையில் இன்று பள்ளிவாசலின் முன்பாக நடைபெற்றது.
நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னாள் கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் ஒமர் காமில் கலந்து கொண்டிருந்தார். அத்துடன் சர்வமத தலைவர்களான கொலன்னாவ நரடாகிமி தேரர், அருட் தந்தை ஜேய் மரியரட்ணம், சுதர்சன்சர்மா குருக்கள், மற்றும் கெசல்வத்த பொலிஸ் பொறுப்பதிகாரி சி.ஐ. ரம்யசிறி, போக்குவரத்துப்பிரிவின் பொலிஸ் அதிகாரி எச்.எம்.கே.டி. ஹேரத்உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது நான்கு சமயத் தலைவர்களின் சமய ஆசிகளுடன் ஒமர் காமில் அவர்களால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு பீர்சாஹிப் வீதி பேள் பாலர் பாடசாலை மாணவர்களால் தேசிய கீதமும் இசைக்கப்பட்டதுடன் அப்பகுதியைச் சேர்ந்த நான்கு சமய மக்களும் கலந்து சிறப்பித்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :