ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் கொட்டப்பட்டுள்ள கொங்ரீட் கற்களை அப்புறப்படுத்துக!



எச்.எம்.எம்.பர்ஸான்-
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் கொட்டப்பட்டுள்ள கொங்ரீட் கற்களை அப்புறப்படுத்துமாறு மைதானத்தை பயன்படுத்தும் விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் குடிநீர் குழாய்கள் பொருத்துவதற்காக பல வருடங்களுக்கு முன்னர் கொங்ரீட் வீதிகள் தோண்டப்பட்டன.
அவ்வாறு தோண்டப்பட்ட கழிவு கற்களே இவ்வாறு ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் ஒரு பகுதியில் கொட்டப்பட்டுள்ளன.

குறித்த மைதானத்தை பிரதேசத்திலுள்ள ஏராளமான விளையாட்டுக் கழக வீரர்களும், பாடசாலை மாணவர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.

அத்தோடு, குறித்த மைதானத்தை பிரதேசத்திலுள்ள அரச உத்தியோகத்தர்கள், முக்கியஸ்தர்கள் எனப்பலரும் உடற்பயிற்சி செய்வதற்கு பாயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு நீண்ட வருடங்களாக கவனிப்பாறற்றுக் காணப்படும் கற்களை அப்புறப்படுத்தி அனைவரும் பயன்படுத்தும் வகையில், மைதானத்தை புனர்நிர்மாணம் செய்ய ஓட்டமாவடி பிரதேச சபை நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :