பள்ளிவாசல்துறை பொது கரப்பந்தாட்ட மைதானத்தில் பகல் இரவு போட்டி



அஸ்ஹர் இப்றாஹிம்-
ள்ளிவாசல் துறை லிவர் பூள் விளையாட்டு கழகம் தமது கழகத்தின் சிரேஸ்ட வீரர்களை கௌரவிக்கும் வகையிலும் இப்பிரதேசத்தில் இலங்கையின் தேசிய விளையாட்டான கரப்பந்தாட்டத்தினை இப்பிரதேசத்தில் பிரபல்யம் படுத்தும் வகையிலும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி பள்ளிவாசல்துறை பொது கரப்பந்தாட்ட மைதானத்தில் பகல் இரவு போட்டியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இச் சுற்றுப்போட்டியில் கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினர்கள் மூன்று அணிகளாக பிரிக்கப்பட்டும் தற்போது உள்ள கனிஷ்ட அங்கத்தவர்களை மூன்று அணிகளாகவும் பிரித்து போட்டிகள் நடாத்தப்பட்டன.

சிரேஸ்ட உறுப்பினர்களைக்கான போட்டியில் ஆர் டீ பி அணியினர் சம்பியன் கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டனர்.

கனிஸ்ட அங்கத்தவர்களுக்கானஅணியினரான லிவர்பூள் சீ அணியினர் கனிஷ்ட பிரிவு சம்பியன் கிண்ணத்தினை சுவிகரித்தனர்

இச்சுற்றுப்போட்டியில் 60 வயதுக்கு மேற்பட்ட சிரேஸ்ட உறுப்பினர்களும் பங்குபற்றி தமது திறமையினையை வெளிக்காட்டியதுடன் அவர்களுக்கு பதக்கமும்,நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :