யு.எஸ்.எப்.சிறீ லங்கா, சாய்ந்தமருது வை.எம்.எம்.ஏ. அமைப்புக்களின் ஏற்பாட்டில் இலவச கருத்தரங்கு!



எஸ்.அஷ்ரப்கான்-
யு.எஸ்.எப்.சிறீ லங்கா, சாய்ந்தமருது வை.எம்.எம்.ஏ. அமைப்புக்களின் ஏற்பாட்டில் "கல்விக்கு கரம் கொடுப்போம்" எனும் திட்டத்தின் கீழ்,
க.பொ.த உயர்தர பரீட்சை-2021 எழுதவுள்ள மாணவர்களின் நலன்கருதி பொது ஆங்கில இலவசக் கருத்தரங்கு அமைப்பின் செயற்பாட்டாளர் ஏ.எம்.சஹானின் தலைமையில், சாய்ந்தமருது வை.எம்.எம்.ஏ.தலைவர் ஏ.ஜி.அன்வரின் வழி நடாத்தலில் சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் (29) இடம் நடைபெற்றது.
மாணவர்களின் நலன்கருதி மேற்கொள்ளப்பட்ட இந்த கருத்தரங்கில் சுமார் 80 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டதுடன் இந்த கருத்தரங்கிற்கு வளவாளர்களாக பயிற்சி நிலையத்தின் ஆங்கில விரிவுரையாளர்கள் கலந்து கொண்டு விரிவுரையாற்றினர்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரி எம்.ரீ.எம்.ஹாரூன், சாய்ந்தமருது வை.எம்.எம்.ஏ. செயலாளர் எஸ்.அஷ்ரப்கான், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் யூ.எல்.எம்.ஜெஸ்மீர், யு.எஸ்.எப்.அமைப்பின் உயர் பீட உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :