யு.எஸ்.எப்.சிறீ லங்கா, சாய்ந்தமருது வை.எம்.எம்.ஏ. அமைப்புக்களின் ஏற்பாட்டில் "கல்விக்கு கரம் கொடுப்போம்" எனும் திட்டத்தின் கீழ்,
க.பொ.த உயர்தர பரீட்சை-2021 எழுதவுள்ள மாணவர்களின் நலன்கருதி பொது ஆங்கில இலவசக் கருத்தரங்கு அமைப்பின் செயற்பாட்டாளர் ஏ.எம்.சஹானின் தலைமையில், சாய்ந்தமருது வை.எம்.எம்.ஏ.தலைவர் ஏ.ஜி.அன்வரின் வழி நடாத்தலில் சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் (29) இடம் நடைபெற்றது.
மாணவர்களின் நலன்கருதி மேற்கொள்ளப்பட்ட இந்த கருத்தரங்கில் சுமார் 80 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டதுடன் இந்த கருத்தரங்கிற்கு வளவாளர்களாக பயிற்சி நிலையத்தின் ஆங்கில விரிவுரையாளர்கள் கலந்து கொண்டு விரிவுரையாற்றினர்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரி எம்.ரீ.எம்.ஹாரூன், சாய்ந்தமருது வை.எம்.எம்.ஏ. செயலாளர் எஸ்.அஷ்ரப்கான், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் யூ.எல்.எம்.ஜெஸ்மீர், யு.எஸ்.எப்.அமைப்பின் உயர் பீட உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment