பொருளாதார நெருக்கடி நீங்கி, சுபீட்சம் மலரட்டும்..!



அஸ்லம் எஸ். மெளலானா-
பிறந்திருக்கும் புத்தாண்டு நாட்டில் இன, மத குரோதம் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் அனைத்தும் நீங்கி, சுபீட்சம் மலர்வதற்கு வழிவகுக்கட்டும் என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
"நிறைவடைந்துள்ள 2021ஆம் ஆண்டானது பல துன்ப, துயரங்கள், சோதனைகளை கடந்து சென்றுள்ளது. குறிப்பாக கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக எமது நாடு நிலைகுலைந்து போயுள்ளதைக் காண்கிறோம்.
கொரோனா பெருந்தொற்று சூழ்நிலைக்கு மத்தியில் நாட்டினதும் பிரஜைகளினதும் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியடைந்திருக்கின்ற அதேவேளை வரலாற்றில் என்றுமில்லாதவாறு அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக

மக்கள் பெரும் துன்பங்களை அனுபவிக்க நேரிட்டிருக்கிறது.

இந்நிலையில் பிறந்திருக்கும் புத்தாண்டில் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்ந்து, இனவாதம், குரோதம், வெறுப்புணர்வு நீங்கி, அன்பு, கருணை, மனிதாபிமானம், சகிப்புத்தன்மை மேலோங்கி, ஐக்கியம், சகவாழ்வு, சமத்துவம் தழைத்தோங்கவும் அனைவரதும் எதிர்காலம் சுபீட்சம் நிறைந்ததாக அமைவதற்கும் பிரார்த்திப்போம்.

மேலும், நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பொருளாதார அபிவிருத்திக்காக இன, மத வேறுபாடுகளைக் கடந்து, இலங்கையர் என்ற ரீதியில் அனைவரும் கைகோர்த்து செயற்பட திடசங்கற்பம் பூணுவோம்.
அனைத்து நெஞ்சங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்ந்துக்களைக் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :