ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ சென்மேரீஸ் கனிஷ்ட
வித்தியாலயத்தின் தசாப்தவிழா 04.01.2022. செவ்வாய்கிழமை கொண்டாடப்பட்டது.
சென்மேரீஸ் கனிஷ்ட வித்தியாலயத்தின் அதிபர் எம்.ராஜநாயகம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மத்திய மாகாண மேலதிக கல்விபணிப்பாளரும் ஹட்டன் கல்வி வலயத்தின் பணிப்பாளருமான ஆர்.ஏ.சத்தியேந்திரா கலந்து கொண்டார் .
நிகழ்வில் வித்தியாலயத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களில் 25 வருட ஆசிரியர் சேவையினை பூர்த்தி செய்த ஆசிரியர் திருமதி நவலெச்சிமிக்கு பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்ட தோடு நினைவு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றதோடு பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஆர்.ஏ.சத்தியேந்திரா
கௌரவிக்கப்பட்டு நினைவு பரிசில் வழங்கி வைக்கப்பட்டது.
மத்திய மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் உட்பட கோட்டம்
இரண்டிற்கு பொருப்பான கோட்டகல்வி பணிப்பாளர் ஏ.வேலுசாமி, ஹட்டன் கல்வி வலயத்தின் ஆரம்ப பிரிவிற்கான உதவி கல்வி பணிப்பாளர். சிவகுமார், உதவி கல்வி பணிப்பாளர், ஜெகன்தாசன் மற்றும் அயல் பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment