ரஹ்மத்பவுண்டேசனின் ஒருங்கிணைப்பில் வை.டபிள்யு.எம்.ஏ.அமைப்பினால் கல்முனையில் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு !



றம்ஸீன் முஹம்மட்-
ஹ்மத் பவுண்டேசனின் ஒருங்கிணைப்பில் வை . டப்ளியு .எம். ஏ. (YWMA ) அமைப்பின் பூரண அணுசரணையுடன்,வாழ்வாதார உதவிகள் மற்றும் 2022 ஆண்டிற்கான பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகத் தலைவரும், கல்முனை மாநகரசபை பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் தலைமையில் கல்முனை அல் - மிஸ்பாஹ் மகா வித்தியாலய மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது .
வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக தெரிவு செய்யப்பட்ட கணவனை இழந்த பெண்களுக்கு உதவி பொருட்கள் ,மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் , பல்கலைகழகத்தில் கல்வியை தொடரும் மாணவி ஒருவருக்கு புலமை பரிசில் , கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய விஷேட கல்வி பிரிவுக்கு உதவிதொகை என்பன இந்நிகழ்வின் போதுவழங்கி வைக்கப் பட்டன. .
இந்நிகழ்வில் ரஹ்மத் பவுண்டேசனின் அமைப்பினால் வை.டபிள்யு.எம்.ஏ.அமைப்பின் தலைவி தேசமான்ய பவாசா தாஹா அவர்களுக்கு ரஹ்மத் பவுன்டேசனினால் வருடா வருடம் வழங்கப்படும் சிறந்த சேவை மற்றும் சிறப்பான தலைமைத்துவ விருதினை இவ்வருடம் இவருக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன் மேலும் கனடா-இலங்கைக்கான முஸ்லிம்பெண்கள் அமைப்பின் தலைவி பைரூசா காசிம் அவர்களுக்கும் ரஹ்மத் பவுண்டேசனினால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கிகெளரவிக்கப்பட்டது.
.இந்நிகழ்வில் வை.டபிள்யு.எம்.ஏ. அமைப்பின் தலைவி தேசமான்ய பவாசா தாஹா , அமைப்பின் அங்கத்தவர்கள் , கனடா-இலங்கைக்கான முஸ்லிம் பெண்கள் அமைப்பின் தலைவி பைரூசா காசிம் , கல்முனை அல் -மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் அதிபர் எம். ஐ. அப்துல் ரஸாக்,கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான ஏ. ஆர். செலஸ்தினா , விமாலாதித்தன் நந்தினி , விநாகமூர்த்தி புவேனேஸ்வரி , சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எஸ். எம். நிலுபா , ரஹ்மத்பவுண்டேசன் அமைப்பின் அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்கள் ,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :