விளையாட்டு அமைச்சின் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள்



எஸ்.எம்.எம்.முர்ஷித் -
ளைஞர் விவகார விளையாட்டு அமைச்சின் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் தொழில் வழிகாட்டல் வாரத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாடசாலைகளில் இருந்து பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.அஸீஸ்;, மட்டக்களப்பு மத்தி உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.யூ.எம்.இஸ்மயில், மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்கள உத்தியோகத்தர் திருமதி.கோகிலா சிவானந்தன், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அதிகாரி, பாடசாலை ஆசிரியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது இளைஞர் விவகார விளையாட்டு அமைச்சின் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் தொழில் வழிகாட்டல் வாரத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட கட்டுரை, பேச்சு, கவிதை, வினாடிவிடை போட்டியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடம் மற்றும் பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :