கட்டுநாயக்கவில் உள்ள (நைட்டா) தேசிய தொழில் பயிலுணா் பயிற்சி பொறியியல் நிறுவனத்தின் 31வது டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பண்டாரநாயக்க ஞாபகாா்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 11.01.2022 நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாகக் தொழில் கல்வி, பயிற்சி கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைச்சா் சீதா ஆரம்பொல தலைமையி்ல் நடைபெற்றது.
சிவில், இலக்றிக்கல், மெக்கணிக்கல் போன்ற டிப்ளோமா பொறியியல் பயிற்சி நெறிகளை வெற்றிகரமாக பூரணப்படுத்திய மாணவ மாணவிகளுக்கே டிப்ளோமா சான்றிதழ்கள் அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டது. நைட்டா நிறுவனத்தின் தலைவா் நளின் தரங்க கம்லத் மற்றும் விரிவுரையாளா்களும் பெற்றோா்களும் கலந்து கொண்டனா்.
0 comments :
Post a Comment