சாய்ந்தமருது-
2021 ஜனவரி 01 தொடக்கம் 2021 டிசம்பர் 31 வரைக்கும் உள்நாடு மற்றும் சர்வதேசரீதியில் முஸ்லிம்களுடன் தொடர்புபட்ட முக்கிய அரசியல் விவகாரங்கள் மற்றும் என்னால் அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரைகள் அல்லது செய்திகள் பற்றிய விடையத்தினை ஆண்டறிக்கையாக பதிவிடுகிறேன்.
ஜனவரி
01. 03.01.2021 முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்று வருகின்ற அடிப்படை உரிமை மீறலை ஐ.நா சபையில் முறையிட வேண்டுமென்று சாணாக்கியன் எம்பி குரல் கொடுத்தார்.
02. 04.01.2021. முஸ்லிம்களின் “ஜனாஸாவை எரிக்காதே” என்று கிளிநொச்சியில் உள்ள தமிழ் பெண்கள் உணர்வுபூர்வமான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
03. 05.01.2021. மாகாணசபை முறைமை ஒழிக்க வேண்டுமென்றும், ஜனாஸாவை புதைக்கும் முடிவுக்கு வரக்கூடாது என்றும் அமைச்சர் சரத் வீரசேகர அழுத்தமாக கோசம் எழுப்பினார்.
04. 07.01.2021 சவூதி அரேபியா, பஹ்ரேன், எமிரேட்ஸ், எகிப்து ஆகிய அரபு நாடுகளினால் கத்தார் நாட்டுக்கு எதிராக 2017 இல் கொண்டுவரப்பட்ட தடை நீக்கப்பட்டது.
05. 08.01.2021 இல் இறுதி போரின்போது முள்ளியவாய்க்காலில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான தமிழ் மக்களுக்காக யாழ்ப்பான பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி உடைக்கப்பட்டது. இதனால் அங்கு பதட்டம் நிலவியதுடன் தமிழர்கள் வீதியில் இறங்கி போராட்டத்தை ஆரம்பித்தனர்.
06. 11.01.2021 தமிழர்களின் ஒற்றுமையான போராட்டம் காரணமாக மீண்டும் யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவுத் தூபி அமைக்கப்பட்டது.
07. 18.01.2021 ஜனாஸா எரிப்பை தடுப்பதற்காக இலங்கை ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் வழங்கும்பொருட்டு புலம்பெயர்ந்து மேற்கு நாடுகளில் வாழ்கின்ற எமது முஸ்லிம் உறவுகள் ஒப்பமிட்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அவர்களுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பினர்.
08. 19.01.2021 டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி அதிகாரத்தில் இருந்த இறுதி நாள்.
09. 20.01.2021. ஜோ வைடன் அமெரிக்க புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றார்.
10. 27.01.2021 முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் காட்டுப்பகுதியில் தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டுத்தளம் அகற்றப்பட்டு அங்கு தொல்பொருள் ஆராய்ச்சி என்ற போர்வையில் குறித்த பிரதேசம் சுவீகரிக்கப்பட்டு பௌத்த வழிபாட்டுத்தளம் நிறுவப்பட்டது.
பெப்ரவரி
11. 01.02.2021 மியன்மார் நாட்டில் மீண்டும் இராணுவத்தினர் ஆட்சியை கைப்பற்றியதுடன், அந்நாட்டின் ஜனநாயக ஆட்சித் தலைவி ஆங்சான் சூக்கி இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டார்.
12. 03.02.2021 பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான தமிழர்களின் போராட்டம் பொத்துவிலில் ஆரம்பமானது.
13. 04.02.2021 பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டதுடன் ஜனாஸா எரிப்புக்கு எதிராக பலத்த கோசம் எழுப்பப்பட்டது. அதேநேரம் முஸ்லிம் தலைவர்கள் சிங்கள தலைவர்களுடன் சேர்ந்து சுதந்திரதின கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
14. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இலங்கை விஜயம்.
15. இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கிய மு.கா பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என்ற வலுவான எதிர்ப்பலைகள் மு.கா தலைவருக்கு எதிராக அதிகரித்தது.
16. 23.02.2021 ஜனாஸா எரிப்புக்கு எதிராக காலிமுக திடலில் தமிழ் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
17. 25.02.2021 இந்தியாவின் ஆறு போர் விமானங்கள் இலங்கையின் வான் பரப்புக்குள் ஊடுருவியது.
மார்ச்
18. 02.03.2021 இரணை தீவில் ஜனாசாக்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதாக அரசாங்கம் அறிவித்தது. அதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
19. 03.03.2021 கட்டாய ஜனாஸா எரிப்பினை நிறுத்தியதனால் மனித உரிமை பேரவையின் அறிக்கையிலிருந்து இந்த விடையத்தினை நீக்குமாறு ஐ.நா சபையை இலங்கை அரசு வலியுறுத்தியது.
20. 12.03.2021 முஸ்லிம் பெண்கள் தங்களது முகத்தினை முழுமையாக மறைக்கின்ற புர்கா ஆடைக்கு தடை விதிக்கப்படுமென்று அமைச்சர் சரத் வீரசேகர அறிவித்தார்.
21. 23.03.2021 இறுதி யுத்தத்தின்போது ஏற்பட்ட யுத்த குற்றம், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பிரித்தானியா தலைமையில் ஐ. நாடுகள் மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்பட்ட இலங்கைக்கு எதிரான பிரேரணையில் இலங்கை தோல்வி அடைந்தது. 47 உறுப்பு நாடுகளில் பிரேரணைக்கு ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும், 14 நாடுகள் நடுநிலைமை வகித்தன.
ஏப்ரல்
23. 06.04.2021 தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.
24. 08.04.2021 பதினொரு இஸ்லாமிய அமைப்புக்களுக்கு அரசாங்கம் தடை விதித்தது. இந்த தடைவிதிப்புக்கு பின்னணியில் இயக்க வெறிபிடித்த முஸ்லிம்களே இருந்தனர் என்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளது.
25. 18.04.2021 ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் தலைமை சூத்திரதாரிகள் என்று இரண்டு மௌலவிகளின் பெயர்களை அமைச்சர் சரத் வீரசேகர அறிவித்தார். ஆனால் அந்த இருவரும் அதன் சூத்திரதாரிகள் அல்ல என்றும், அதன் உண்மையான சூத்திரதாரிகள் இன்னமும் கைது செய்யப்படவில்லை என்றும் கார்டினல் மல்கம் ரஞ்சித் அறிவித்தார்.
26. 25.04.2021 மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன் அவர்கள் நள்ளிரவு வேளையில் கைது செய்யப்பட்டார்.
மே
27. 02.05.2021 தமிழக சட்டமன்ற தேர்தல் பெறுபேறுகள் வெளியானது. அதில் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க வெற்றிபெற்று தமிழக ஆட்சியை கைப்பற்றியது.
28. 07.05.2021 ரமழான் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமை “சர்வதேச குத்ஸ்” தினமாகும். மஸ்ஜிதுல் அக்ஸாவில் பாலஸ்தீனர்கள் இத்தினத்தை கொண்டாடியபோது யூத இராணுவத்தினர் மஸ்ஜிதுல் அக்சாவுக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
29. 07.05.2021 இருபதுக்கு ஆதரவளித்த முஸ்லிம் உறுப்பினர்கள் பிரதமரின் இப்தாரில் கலந்துகொண்டனர். இதனால் பாரிய விமர்சனம் எழுந்தது.
30. 09.05.2021 புனித மஸ்ஜிதிலிருந்து வெளியேறுமாறு கால அவகாசம் வழங்கியபின்பு இஸ்ரேலுக்கு எதிரான ராகெட் தாக்குதலை ஹமாஸ் இயக்கத்தினர் ஆரம்பித்தனர்.
31. 11.05.2021 பாலஸ்தீனர்களுக்கு எதிராக யூத இராணுவத்தினர் தொடர்ந்து நடாத்திவருகின்ற வன்முறை காரணமாக இஸ்ரேலுக்கு வழங்கிவருகின்ற உதவிகளை நிறுத்துமாறு அமெரிக்க காங்கிரசிலும், செனட்டிலும் முதன் முறையாக குரல் எழும்பியது.
32. 12.05.2021 பாலஸ்தீன மக்களையும், புனித பிரதேசத்தையும் பாதுகாக்க படைகளை அனுப்ப போவதாக துருக்கி அதிபர் அறிவித்ததுடன், பல உலக தலைவர்களுடன் உரையாடினார். ஆனால் இறுதிவரைக்கும் அது நடைபெறவில்லை.
33. 16.05.2021 இஸ்ரேலுடன் ஆரம்பமான போரில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட ராக்கெட்களை இஸ்ரேல்மீது ஏவியதாக ஹமாஸ் அறிவித்தது.
34. 17.05.2021 ஹமாசின் ஆளில்லா விமானங்களையும், நீர்மூழ்கி கப்பலையும் தாக்கி அழித்ததாக இஸ்ரேல் அறிவித்தது.
35. பதினொரு நாட்கள் நடைபெற்ற போருக்கு பின்பு 20.05.2021 இல் எந்தவித நிபந்தனைகளுமின்றி ஹமாஸுடன் யுத்த நிறுத்தம் செய்வதற்கு இஸ்ரேல் முன்வந்தது. இதற்காக எகிப்து மத்தியஸ்தம் வகித்தது.
36. 23.05.2021 புத்தளம் நகரபிதா KA. பாயிஸ் மரணமடைந்தார்.
ஜூன்
37. 02.06.2021 அமெரிக்கா தனது நட்பு நாட்டு தலைவர்களின் கைத்தொலைபேசிகளை ஒற்றுக் கேட்ட விவகாரம் அம்பலமானதால் பாரிய சர்ச்சை ஏற்பட்டது.
38. 10.06.2021 ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை சட்டம், விசாரணையின்றி சமூகவியலாளர்கள், ஊடகத்துறையினர் போன்றோர் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டமை போன்றவைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
39. 13.06.2021 ஹமாஸிடம் தோல்வியடைந்ததன் காரணமாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது பதவியை இழந்ததுடன், புதிய பிரதமராக நப்டாளி பென்னெட் பதவி ஏற்றார்.
40. 16.06.2021 ரசூலுல்லாஹ்வை விமர்சித்தவாறு கோசம் எழுப்பிக்கொண்டு யூதர்கள் இஸ்ரேலில் ஊர்வலம் சென்றனர்.
41. ஆப்கானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதற்காக கட்டாரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தலிபான்களுடன் அமேரிக்கா உடன்பாடு கண்டது. அதனை தொடர்ந்து அமெரிக்க படைகள் வெளியேற ஆரம்பித்ததும், அவ்விடங்களை தலிபான்கள் கைபற்ற ஆரம்பித்தனர்.
ஜூலை
42. 20.07.2021 அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக எதிர்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையில் அமைச்சர் வெற்றிபெற்றார்.
43. றிசாத் பதியுதீன் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் உள்ள நிலையில் அவரது இல்லத்தில் பணிபுரிந்த சிறுமி உயிரிழந்ததானது பாரிய சர்ச்சையினை உருவாக்கியது.
ஓகஸ்ட்
44. 01.08.2021 சர்வதேச ஒலிம்பிக் போட்டி ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் ஆரம்பமானது. 2020 இல் நடைபெற இருந்த இப்போட்டி கொரோனா தாக்கம் காரணமாக பிற்போடப்பட்டிருந்தது.
45. 09.08.2021 தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பதவியேற்றார்.
46. 15.08.2021 ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலை தலிபான்கள் சுற்றிவளைத்தபோது ஜனாதிபதி அஸ்ரப் காணி நாட்டைவிட்டு தப்பிச்சென்றார். பின்பு தலிபான்கள் தலைநகர் உள்ளே சென்று நாட்டின் அதிகாரத்தினை கைபற்றினர்.
47. ஆப்கானின் தலைநகரை தலிபான்கள் கைபற்றியதும் நேச நாட்டு படைகளுடன் தொடர்பில் இருந்த அனைத்து ஆப்கானியர்களும் நாட்டைவிட்டு தப்பிச்செல்லும் நோக்கில் ஆப்கான் சர்வதேச விமான நிலையத்தில் ஒன்று குவிந்தனர். அங்கு சிலர் விமானத்தில் தொங்கிக்கொண்டு நாட்டைவிட்டு தப்பிச்செல்ல முற்பட்ட காட்சி உலகை உலுக்கியது.
48. 31.08.2021 அமெரிக்காவின் இறுதி படைப்பிரிவு ஆப்கானைவிட்டு வெளியேறியது. அதில் மேஜர் ஜெனரல் கிறிஸ் என்ற வீரர் இறுதியாக விமானத்தில் ஏறியதாக அமெரிக்கா அறிவித்தது.
49. வரலாற்றில் 17 நாட்களில் எங்கள் இராணுவ, விமானப் படைகள் மிகப்பெரிய விமானப் போக்குவரத்தை இயக்கி, சுமார் 120,000 குடிமக்களை ஆப்கானிலிருந்து வெளியேற்றியதாக அமெரிக்கா அறிவித்தது.
50. மன்னார் பிரதேச சபையில் தனது கட்சி உறுப்பினர் தவிசாளராக வருவதை விரும்பாமல் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குமாறு கோரியதனால் மு.கா தலைவர் பாரிய விமர்சனங்களை எதிர்கொண்டார்.
செப்டெம்பர்
51. 02.10.2021 மூதூர் தேர்தல் பிரச்சார கூட்ட குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்கள் இருபது வருடங்களுக்கு பின்பு முதன்முறையாக மு.கா தலைவரினால் நினைவு கூறப்பட்டார்கள்.
52. எந்த தடை வந்தாலும் காதி நீதிமன்றங்கள் ஒழிக்கப்படும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்கள் பகிரங்கமாக அறிவித்தார்.
ஒக்டோபர்
53. கல்முனை பிரச்சினையை தீர்க்கக்கூடிய பொருத்தமானவர் முன்வந்தால் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினமா செய்வதாக எச்.எம்.எம். ஹரீஸ் எம்பி அவர்களின் அறிக்கை பாரிய சர்ச்சையினை தோற்றுவித்தது.
54. 24.10.2021 சூடானில் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டுவந்த சூடானிய அரசை கவிழ்த்துவிட்டு இராணுவம் ஆட்சியை கவிழ்த்ததனை இஸ்லாமிய உலகம் வரவேற்றது.
55. 26.10.2021 கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் 13 பேர்கொண்ட “ஒரே நாடு ஒரே சட்டம்” என்னும் ஜனாதிபதி செயலணியை வர்த்தமாணி மூலமாக ஜனாதிபதி அறிவித்தார்.
56. 30.10.2021 ராஜபக்ச குடும்பத்துடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ஆளும் பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கின்ற பதினொரு கட்சிகள் ஒன்றிணைந்து “மக்களின் பேரவை” யை அமைத்துள்ளனர்.
நவம்பர்
57. 02.11.2021 தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டம் யாழ்பாணத்தில் நடைபெற்றது. அதில் பதின்மூன்றாவது திருத்தத்தினை முழுமையாக அமுல்படுத்துமாறு மு.கா தலைவர் அழுத்தம் வழங்கியதன் மூலம் அவர் வடக்கு கிழக்கு இணைப்பை வலியுறுத்துவதாக விமர்சனம் எழுந்தது.
58. 13.11.2021 முஸ்லிம்களுக்கான நிலத்தொடர்பற்ற மாகாண கோரிக்கையை முதன்முதலில் வலியுறுத்திய முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியின் செயலாளர் எம்.ஐ.எம்.முஹியதீன் மரணமடைந்தார்.
59. 21.11.2021 வஜ்ஜட்டுக்கு வாக்களிப்பது பற்றி தீர்மானிப்பதற்கு மு.கா அதிஉயர்பீடம் கூடியது. அதில் வஜ்ஜட்டுக்கு ஆதரவாக “வாக்களிப்பதில்லை” என்று தீர்மானித்தனர். ஆனால் “வஜ்ஜட்டை எதிர்த்து வாக்களித்தல்“ என்று தீர்மானிக்கவில்லை.
60. 23.11.2021 கிண்ணியாவில் குறுஞ்சாகேணி பாலம் அமைப்பதற்காக மாற்று பாதைதிட்டம் எதுவுமில்லாமல் பழைய பாலம் உடைக்கப்பட்டதனால், பாதுகாப்பற்ற படகு பாதை மூலம் பயணம் செய்யும்போது பாதை கவிழ்ந்ததனால் பாடசாலை குழந்தைகள் உற்பட பலர் மரணமடைந்தனர்.
டிசம்பர்
61. கலகொட அத்தே ஞானசார தேரர் காத்தான்குடி, கல்முனை போன்ற முஸ்லிம் பிரதேசங்களுக்கு அழைத்துவரப்பட்டார். இது முஸ்லிம்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
62. 10.12.2021 அம்பாறை மாவட்டத்தின் சங்கமன்கண்டி – கோமாரி பிரதேசத்தில் திடீரென புத்தர் சிலை வைக்கப்பட்டதனால் அங்கு பதட்டநிலை உருவானது.
63. 12.12.2021 வரவ - செலவு திட்ட கூட்டத்தொடர் முடிவடைந்ததன் பின்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரை இடைநிறுத்த ஜனாதிபதியின் விசேட வர்த்தமாணி அறிவித்தல் வெளியானது.
64. 21.12.2021 மு.கா உட்பட தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் இந்திய பிரதமருக்கு அனுப்புவதற்காக ஆவணம் தயாரிக்கப்பட்டது. இது முஸ்லிம்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டதனால் குறித்த ஆவணத்தில் மு.கா தலைவர் கைச்சாத்திடாத நிலையில் கொழும்பில் நடைபெற்ற கூட்டம் கலைந்தது.
65. 26.12.2021 “நாட்டை இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும், ஜனநாயக கதைகள் கூறுவோரை சிறையில் அடைக்க வேண்டும“ என்று கலகொட அத்தே ஞானசார தேரர் அறிவித்தார்.
66. 29.12.2021 மு.கா உறுப்பினர் நசீர் அஹமட், த.தே.கூ உறுப்பினர் சாணாக்கியன் ஆகியோர்களுக்கிடையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை சம்பந்தமான நேரடி விவாதம் நடைபெற்றது.
0 comments :
Post a Comment