மத்திய அதிவேக நெடுஞ்சாலை திறக்கப்பட்டு 12 மணி நேரத்தில் ரூ 2,805,100 லட்சம் வருமானம்



ஊடகப் பிரிவு
நெடுஞ்சாலை அமைச்சு-

த்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் (அதுகல்புர நுழைவாயில்) 15-01-2022 அன்று அதிமேதகு ஜனாதிபதி மற்றும் மாண்புமிகு பிரதமர் அவர்களின் அனுசரணையின் கீழ் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. பாதை திறக்கப்பட்ட முதல் 12 மணிநேரத்தில் (16-01-2022) (நண்பகல் 12.00 மணியிலிருந்து நள்ளிரவு 12.00 மணிவரை )
ரூ. 2,805,100.00 லட்சம் வருமானம் கிடைத்ததாக ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மீரிகம முதல் குருநாகல் வரையிலான அதிவேக நெடுஞ்சாலையில் முதல் 12 மணித்தியாலங்களில் 13,583 வாகனங்கள் பயணித்துள்ளதுடன் விபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை.

சனிக்கிழமை (15-01-2022) நள்ளிரவு முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணி வரை மீரிகமவிலிருந்து குருநாகல் வரை கெட்டுவான நுழைவாயில் வரையிலும், கெட்டுவானவிலிருந்து மீரிகம வரையிலும் பொதுமக்களுக்கு இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்பட்டதாகவும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :