சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு றிஸ்லி முஸ்தபாவினால் போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கி வைப்பு



ஐ. எல். எம். நாசிம் ,எம். என். எம். அப்ராஸ்-
ம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கல்முனை தொகுதி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன முக்கியஸ்தகர் றிஸ்லி முஸ்தபாவினால் ஒரு தொகுதி பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது .

வைத்தியசாலையின் வேண்டுகோளுக்கிணங்க போட்டோ கொப்பி இயந்திரம் மற்றும் விடுதிகளுக்கான அத்தியாவசிய தேவைக்கான உபகரணங்கள் என்பன வைத்திய அத்தியட்சகர் ஆசாத் எம் .ஹனிபாவிடம் இன்று (29) அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் இதன் போது வைத்தியசாலையின் குறை நிறைகளை வைத்தியசாலை அத்தியட்சகரிடம் றிஸ்லி முஸ்தபா கேட்டறிந்து கொண்டார்.
இவ்வாறான பெறுமதியான பொருட்களை வைத்தியசாலையின் தேவை கருதி துரிதமாக வழங்கியமைக்கும் வைத்தியசாலை சமூகம் சார்பாக வைத்திய அத்தியட்சகர் நன்றியினை தெரிவித்தார்.

இன் நிகழ்வில் வைத்தியசாலை திட்டமிடல் வைத்தியர் நியாஸ் அஹமட், வைத்தியர்கள் வைத்தியசாலை நிர்வாக உத்தியோகத்தகர் கே.ஏ ஜப்பார், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள்,
றிஸ்லி முஸ்தபாவின் பிரதிநிதிகளான சம்மாந்துறையை சேர்ந்த ஏ.எம்.எம் பாரிஸ்,எஸ்.ஏ.என் சபி செய்யத், கே.எல்.எம் சப்றி , என பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :