பரீட்சைகளுக்கான புதிய திகதிகள் அறிவிப்பு



மினுவாங்கொடை நிருபர்-
2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த. உயர் தர மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளுக்கான பரீட்சைகள் நடைபெறும் திகதிகள், இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்பிரகாரம், தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை, 2022 ஜனவரி மாதம் 22 ஆம் திகதி நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அத்துடன், 2022 பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 5 ஆம் திகதி வரை க.பொ.த. உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கும், சாதாரண தரப் பரீட்சையை மே மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் ஜூன் மாதம் 1 ஆம் திகதி வரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :