அதன் போது நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் என்று பாடசாலைகள் இல்லாமல் ஒரே பாடசாலை என்று இருக்க வேண்டும் என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இது முட்டாள்தனமான கருத்தாகும். இத்தகைய முட்டாள்தனமான கருத்தை சில முஸ்லிம் அமைச்சர்களும் கடந்த காலங்களில் கூறியுள்ளனர்.
இதற்கு நாம் தெளிவாக பதில் கொடுத்துள்ளோம் என ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
சிங்கள, தமிழ், முஸ்லிம் பாடசாலைகளை ஒழிக்க வேண்டும் என்றால் நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகள் அனைத்தும் ஆங்கில மொழியில் இயங்க வேண்டும்.
அதனை செய்ய அரசு தயாரா? என முபாரக் அப்துல் மஜீத் கோட்டாபய அரசுக்கு சவால் விடுத்துள்ளார்.
0 comments :
Post a Comment