ஏறாவூர்ப் பிரதேசத்தில் சீமெந்து விற்பனை நிலையம் முற்றுகை!



ஏறாவூர் நிருபர் - நாஸர்-
ட்டக்களப்பு- ஏறாவூர்ப் பிரதேசத்தில் அதிகவிலைக்கு சீமெந்துப் பைக்கற்றுக்களை விற்பனை செய்த வர்த்தக நிலையமொன்றினை நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகள் முற்றுகையிட்டுள்ளனர்.

240 சீமெந்துப் பைக்கற்றுக்களை கொள்கலன் ஒன்றில் வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்தமை தொடர்பாக கிடைத்த தகவலையடுத்து பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜுத் கிழக்கு மாகாண நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளுக்கு அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து அந்த வர்த்தக நிலையத்தினை பொலிஸாரின் உதவியுடன் முற்றகையிட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகள் வர்த்தக நிலைய உரிமையாளரை எச்சரித்ததுடன்
அனைத்து சீமெந்துப் பைக்கற்றுக்களையும் தமது முன்னிலையில் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்யுமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க விற்பனை செய்யப்பட்டதாக நுகர்வோர் அதிகார சபையின் உதவிப்பணிப்பாளர் ஆர்எப். அன்வர் சாதாத் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :