ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி நாடு சில கட்டுப்பாடுகளுடன் முழுமையாகத் திறக்கப்படவுள்ள நிலையில், அமைச்சரவையிலும் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தேசித்திருப்பதாக, இணையத்தளச் செய்திச் சேவையொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதன்பிரகாரம், முழுமையான அமைச்சரவை மாற்றமாக இது அமையும் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பெரும்பாலும் வரவு செலவுத் திட்டத்திற்குப் பின்னரே அமைச்சரவையில் மாற்றம் நிகழ்வது வழக்கம். இருப்பினும், இம்முறை அதற்கு முன்னதாகவே அமைச்சரவை முழுமையாக மாற்றியமைக்கப்படவிருப்பதாக, இணையத்தளச் செய்தியில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதற்கு முன்னர் விருப்பம் வெளியிடவில்லை என்றாலும், தற்போது அவர் பூரண விருப்பம் வெளியிட்டிருப்பதாக, அலரி மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment