இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹேவாவின் பதவி விரைவில் பறிப்பு?


J.f.காமிலா பேகம்-

மா
நகர அபிவிருத்தி, கடலோரப் பாதுகாப்பு தொடர்பிலான இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக்க கொடஹேவாவின் சில அதிகாரங்கள் பறிக்கப்படப் போவதாக தகவல் கிடைத்துள்ளது.

கடந்த வாரம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகரவின் அமைச்சுப் பொறுப்புக்கள் மற்றும் அதிகாரங்களை ஜனாதிபதி கைப்பற்ற செய்தி கிடைத்தது.

அவ்வாறே ஜனாதிபதி, கடந்த வாரத்தில் அமைச்சர் சரத் வீரசேகரவின் இரண்டு விடயங்களை மீளத்தன்வசப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில் இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹேவாவின் சில பொறுப்புக்களை அரசாங்கத்தின் உயர்பீடம் மீளப் பொறுப்பேற்கவிருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

கடந்த சில வாரங்களாக இராஜாங்க அமைச்சரது செயற்பாடுகள் மற்றும் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் அரச உயர்பீடத்திற்குப் பல முறைப்பாடுகள் சென்றிருப்பதே இதற்கான காரணம் என ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.






ReplyForward












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :