டயர் வெடித்து லொரி விபத்து; தெய்வாதீனமாக உயிர் தப்பிய சாரதியும், நடத்துனரும்



எச்.எம்.எம்.பர்ஸான்-
வேகமாக பயணித்த லொரி ஒன்றின் டயர் வெடித்ததில் அந்த லொரி விபத்துக்குள்ளான சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணையடி பிரதான வீதியில் வைத்தே இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அம்பாறை - இறக்காமம் பகுதியில் இருந்து குருநாகல் - குளியாப்பிட்டிய பகுதிக்கு பொருட்கள் ஏற்றிச் சென்ற லொரியின் டயர் வெடித்தே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

சன நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதால் உயிராபத்தின்றி பாதுகாக்கப்பட்டுள்ளன.

டயர் வெடித்த லொரி வீதியோரத்திலிருந்த மரம் ஒன்றில் மோத முற்பட்ட போது அதன் சாரதி காணி ஒன்றில் லொரியை செலுத்தியுள்ளார்.

லொரியில் பயணித்த சாரதியும், நடத்துனரும் எவ்வித காயங்களின்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

விபத்துக்குள்ளான லொரியின் கீழ்ப்பகுதி பாரிய சேதமடைந்துள்ளதுடன், இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :