பயிர்களை துவம்சம் செய்த யானை



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
ட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மஜ்மாநகர் கிராமத்தில் இரவு வேளைகளில் யானைகளின் அட்டகாசத்தால் சொத்துக்கள் சேதமாக்கப்படுவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மஜ்மாநகர் கிராமத்தில் வாழும் மக்கள் தங்களது காணியில் பயன்தரும் மரங்கள் மற்றும் மரக்கறி தோட்டங்கள் அமைத்து பராமரித்து வரும் நிலையில் இரவு வேளைகளில் வரும் யானைகள் இவற்றை சேதப்படுத்தி செல்லும் நிலைமை காணப்பட்டு வருகின்றது.

மஜ்மாநகர் கிராமத்திற்கு வருகை தந்த யானை மூன்று நபர்களின் வீட்டுத் தோட்டத்தில் காணப்பட்ட தென்னை மரங்கள், மா மரங்கள், மரவள்ளி தோட்டம், தண்ணீர் குழாய் மற்றும் வேலிகளை துவசம்சம் செய்து சென்றுள்ளது.

இம்மாதம் மாத்திரம் மஜ்மாநகர் கிராமத்திற்கு இரவு வேளையில் யானைகள் இரண்டு தடவைகள் வருகை தந்து பயிர்களை துவம்சம் செய்து வீட்டு உபகரணங்களையும் சேதப்படுத்தி சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மஜ்மாநகர் பகுதி மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கும், பயிர்களை யானைகள் துவம்சம் செய்யாது எமது பகுதியை சுற்றி யானை வேலி அமைத்து தருமாறு பாதிக்கப்பட்ட மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :