காரைதீவில் மக்களின் நலன்கருதி நடமாடும் தடுப்பூசி சேவை ஆரம்பம்



நூருல் ஹுதா உமர்-
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீரின் தலைமையில் நடமாடும் தடுப்பூசி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த டாக்டர் தஸ்லிமா வஸீர், வீட்டில் இருந்து தடுப்பூசி மையங்களுக்கு வர முடியாதவர்கள் அந்தந்த பகுதி பொதுச்சுகாதார மாதுகளிடமோ அல்லது பொது சுகாதார உத்தியோகத்தர்களிடமோ அவர்களின் பெயர்களை பதிவு செய்து வீட்டிலேயே தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும். என்றும் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பகுதியில் 75% மக்கள் ஏற்கனவே தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டனர் என்றார்.

சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வசீர் அவர்களின் ஆலோசனைக்கு அமைய வீட்டிலிருந்து வரமுடியாதவர்களுக்கு காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் வீடுகளுக்கு சென்று கொவிட்-19 தடுப்பூசிகளை நேற்று வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :