சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் நிதிப்பிரிவில் நண்பகல் திடீரென தீ பரவல் சம்பவமொன்று நேற்று (20) இடம்பெற்றது.
தீப்பிடித்த தகவலறிந்த கல்முனை மாநகர தீயணைப்பு படை, மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலக ஊழியர்கள் துரிதகதியில் களமிறங்கி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன் பாரிய சேதங்களிலிருந்தும் பிரதேச செயலகத்தையும், சுற்றுப்புற சூழலையும் பாதுகாத்தனர் .
இது தொடர்பாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனிபாவை தொடர்புகொண்டு வினவிய போது
சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் ஏற்பட்ட தீ, மின்னொழுக்கினால் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் இலங்கை மின்சார சபையில் இது தொடர்பான தொழில் நுட்ப அறிக்கை ஒன்றை கோரியுள்ளதாகவும்,மேலும் எந்த ஒரு ஆவணமும் தீயினால் சேதமடையவில்லை என்பதையும் உறுதிப்படுத்தினார்.
இவ் அனர்த்தம் தொடர்பாக அம்பாரை அரசாங்க அதிபர் அவர்களுக்கு அறிக்கையிடப்பட்டுள்ளதுடன் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
அறையில் உள்ள ஒரு சில தளபாடங்களே சேதமடைந்ததாகவும், இவ் தீயணைப்பை கட்டுப்படுத்த உதவிய சம்மாந்துறை பிரதேச செயலக ஊழியர்கள் மற்றும்
கல்முனை மாநகர தீயணைப்பு பிரிவினர் , உட்பட பொது மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார்.
0 comments :
Post a Comment