இறுதிக்கட்டப்பேரின்போது முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த தமிழ்உறவுகளை நினைவுகூர்ந்து நேற்றுமாலை தமிழர் பிரதேசங்களில் பரவலாக வீடுகளில் நினைவுச்சுடரேற்றிஅஞ்சலி நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.
அந்தவகையில் அம்பாறை மாவட்டத்திலும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்
முக்கயஸ்தரும் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை
ஜெயசிறில் தனது வீட்டில் உயிர்நீத்த உறவுகள் நினைவாக புஸ்பாஞ்சலி
செலுத்தி சுடரேற்றிஅஞ்சலி செலுத்தினர். கொவிட் 19 அசாதாரண சூழ்நிலைகாரணமாக அமைதியாக சுகாதாரமுறைப்படி இந்நிகழ்வு
அவரது வீட்டில் நடைபெற்றது.
மேலும் சில தமிழ்ப்பற்றாளர்களும் சுடரேற்றிஅஞ்சலிசெலுத்தினர்.
நிகழ்வு இடம்பெற்றுமுடிந்த பிற்பாடு பொலிசார் வந்து விசாரணை செய்து
சென்றிருந்தார்கள். கடந்த மாத சபை அமர்வில் உலகத்தமிழர்கள் அனைவரும் மே 18ஆம் திகதி 18மணி 18நிமிடம் 18விநாடியில் எமது உயிர்நீத்தஉறவுகளை நினைவுகூரவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment