அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா அப்பட்டமான பொய்கள் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயன்றார். சட்டபூர்வமாகவும் ஜனநாயக ரீதியாகவும் செயல்படும் அமைப்பான பாப்புலர் ஃப்ரண்டுடன் தொடர்பில் இருப்பதே குற்றம் என்ற தோற்றத்தை உருவாக்க அவர் முயன்றார். மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஒரு சில மாநிலங்களில் தடைசெய்யப்பட்ட அமைப்பு என்று அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார். இது ஒரு வெளிப்படையான பொய். ஜார்கண்ட் மாநில பாஜக அரசாங்கம் மட்டுமே பாப்புலர் ஃப்ரண்டை ஜனநாயக விரோத மற்றும் சர்வாதிகார நடவடிக்கையின் மூலம் தடை செய்தது. அந்த தடையும் உயர் நீதிமன்றத்தால் நீக்கப்பட்ட பின், மீண்டும் தடை செய்துள்ளது. இந்த விவகாரம் ஆதாரமற்ற, கற்பனைகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் உயர்நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வரும்போது, மீண்டும் ரத்து செய்யப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.
பத்திரிகையாளர் சித்தீக் காப்பன் மற்றும் கைது செய்யப்பட்ட மாணவர் தலைவர்கள் உ.பி. காவல்துறையினர் உருவாக்கிய பொய்யான கட்டுக்கதைகளின் பலிகடாக்கள் ஆவர். அனைத்து அப்பாவிகளும் சிறையிலிருந்து வெளியே வரும் வரை நீதி முழுமையடையாது. சொலிசிட்டர் ஜெனரலின் தவறான கூற்றுகள் மற்றும் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த அவர் மேற்கொண்ட தீங்கிழைக்கும் முயற்சிகளை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது. சிவில் உரிமை அமைப்புகள், பத்திரிகையாளர் அமைப்புகள், அரசியல் தலைவர்கள், சமூகத் தலைவர்கள், செயல்பாட்டாளர்கள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்டோர் நீதிக்கு ஆதரவாக நிற்பதை பாப்புலர் ஃப்ரண்ட் பாராட்டுகிறது. மேலும் இவ்விசயத்தில் நீதி கிடைக்கும் வரை அனைவரும் உறுதியுடன் இருக்க வேண்டும் எனவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கிறது. என அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment