”சுத்தமான நகரை நோக்கி” எனும் தொனிப்பொருளில் ஏறாவூரில் சிரமதானம்..

ஏறாவூர் அர்ஷாத்-

றாவூர் நகர சபையின் தவிசாளரின் வழிகாட்டலின் கீழ் ”சுத்தமான நகரை நோக்கி” எனும் தொனிப்பொருளில் ஏறாவூர் பிரதேசத்தில் வட்டார ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் சிரமதான நிகழ்வுகள் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் மிகவும் சிறப்பாக இடம்பெற்று வருகிறது.

ஏறாவூர் 3A மக்காமடி வட்டார சிரமதான நிகழ்வு நேற்று (07) கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும், ஏறாவூர் நகர சபை உறுப்பினருமான எம்.எஸ்.சுபைர் தலைமையில் இடம்பெற்றது.

இச்சிரமதான நிகழ்வின் போது ஏறாவூர் நகர சபை தவிசாளர் எம்.எஸ்.எம்.நழீம், நகர சபை செயலாளர் சியாஹூல் ஹக், நகர சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்கள், பள்ளிவாசல் நிருவாகத்தினர், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது வீதிகள் மற்றும் வடிகான்கள் சுத்தம் செய்யப்பட்டதுடன், வீட்டுக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு அவை முறையாக அகற்றப்பட்டது. அத்துடன் பொது இடங்களும் துப்பரவு செய்யப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :