வாழைச்சேனை பகுதியில் புதையல் தேண்டிய எட்டு பேர் கைது

எஸ்.எம்.எம்.முர்ஷித்-

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொத்தானை பகுதியில் வைத்து சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட எட்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொத்தானை பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக வாழைச்சேனை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து வாழைச்சேனை பொலிஸாருடன் இணைந்து அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பின் போது கண்டி, வாழைச்சேனை, ஓட்டமாவடி, ரத்னபுர, வெலிக்கந்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த எட்டு நபர்களும், புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட பூசைப் பொருட்கள் மற்றும் புதையல் தோண்டும் ஆயுதப் பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இடம்பெற்று வரும் சட்டவிரோத செயல்களை தடுக்கும் வகையில் வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.ஜெயசுந்தரவின் வழிகாட்டலில், வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் விஷேட குழு ஒன்று எனது தலைமையில் செயற்பட்டு வருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :