கொள்ளைச் சம்பவங்களை தடுக்கும் நோக்கில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி.கெமராக்கள் திருட்டு!


எச்.எம்.எம்.பர்ஸான்-

கொள்ளைச் சம்பவங்களை தடுக்கும் நோக்கில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கெமராக்கள் திருடப்பட்டுள்ள சம்பவமொன்று நேற்றிரவு (11) இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை நூரானியா வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் பொருத்தப்பட்டிருந்த மூன்று கெமராக்கள் திருடப்பட்டுள்ளன.

மாஸ்க் அணிந்து கொண்டு வந்த நபர் ஒருவர் குறித்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த மூன்று கெமராக்களையும் திருடும் காட்சி பதிவாகியுள்ளது.

குறித்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட நபரை அடையாளம் காண வீட்டு உரிமையாளர்கள் வாழைச்சேனை பொலிஸாரின் உதவியை நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :