பதவி உயர்வு பெற்றுள்ள வலயக் கல்விப் பணிப்பாளர் உமர் மௌலானா கௌரவிப்பு

எச்.எம்.எம்.பர்ஸான்-

லங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 1 இற்கு பதவி உயர்வு பெற்றுள்ள மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம்.எஸ். உமர் மௌலானாவை கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (13) ரிதிதென்ன இக்றஹ் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

கோறளைப்பற்று மேற்கு கோட்ட அதிபர்கள் சங்கம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வு அதிபர் சங்கத்தின் தலைவர் ஏ.எல்.அபுல் ஹஸன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதில், அதிபர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதோடு, அதிபர் சங்கத்தினால் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு நினைவுப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.அஹ்ஸாப், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :