வனஜீவராசிகள் பாதுகாப்பு மற்றும் வன வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்கவின் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களின் இணைப்பாளராக ஏறாவூரைச் சேர்ந்த எம்.எஸ்.ஏ.கபூர்தீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவருமான எம்.எஸ்.சுபைரின் சிபாரிசின் பேரிலே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரும், சுதந்திரக்கட்சியின் மட்டு, மாவட்ட தலைவருமான எம்.எஸ்.சுபைரின் அலுவலகத்தில் நேற்று (18) இடம்பெற்ற நிகழ்வின் போது இவருக்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.
வனஜீவராசிகள் பாதுகாப்பு மற்றும் வன வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரினால் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நேரடியாக கண்காணிப்பதற்கும், அம்மாவட்ட மக்களின் பிரச்சினைகளை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்த்து வைக்கும் நோக்கிலுமே குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற மக்கள் வங்கியின் முகாமையாளரும், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினருமான கபூர்தீன் பொது அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்களில் முக்கிய பதவிகளை வகித்து ஏறாவூர் பிரதேசத்தில் பல்வேறு சமூகப்பணியாற்றிவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment