மருதமுனை குரான் மதரஸா மாணவர்களுக்கு குரான் பிரதிகள் வழங்கிவைப்பு !



நூருல் ஹுதா உமர்-
ட்டார் நாட்டின் தனவந்தர்கள் மற்றும் தொழில் நிமிர்த்தம் கட்டாருக்கு புலம்பெயர்ந்த இலங்கையர்களின் அனுசரணையில் இலங்கை பைத்துல் ஹெல்ப் அமைப்பினால் மருதமுனை மஸ்ஜித்துல் நூர் ஜும்மா பள்ளிவாசலில் இயங்கும் ஹிபுல் மதரஸா மாணவர்களுக்கு குரான் பிரதிகள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
அரச காரியாலயங்கள், பாடசாலைகள், பள்ளிவாசல்களுக்கு இலவச குடிநீர் வழங்குதல், மாணவர்களின் கல்விக்கு கைகொடுத்தல் என பல சமூக நல வேலைத்திட்டங்களை பைத்துல் ஹெல்ப் அமைப்பு மக்களுக்காக தொடர்ந்தும் நாடாளாவிய ரீதியில் செய்து வருகின்றது. அவர்களின் வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக இலங்கை பைத்துல் ஹெல்ப் அமைப்பின் பிரதானி ரைஸுல் ஹக்கீம் குரான் மதரஸா மாணவர்களின் நலன்கருதி இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருந்தார்.
இந்நிகழ்வில் மருதமுனை மஸ்ஜித்துல் நூர் ஜும்மா பள்ளிவாசலின் தலைவர், செயலாளர் உட்பட நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :