பல சமாதான புறாக்கள் விடப்பட்டு மருதமுனை பறக்கத் டெக்ஸ் நிறுவனத்தில் இலங்கையின் 73வது சுதந்திர தின நிகழ்வு



றாசிக் நபாயிஸ், பி.எம்.எம்.ஏ.காதர், ஏ.எல்.எம்.சினாஸ்-
லங்கையின் 73வது சுதந்திர தினத்தையொட்டி மருதமுனை பறக்கத் டெக்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்த சுதந்திர தின நிகழ்வு இன்று (04-02-2021) காலை 9.30மணியளவில் மருதமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள நிறுவனத்தின் முன்பாக நடைபெற்றது.

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நிறுவனத்தின்
நிருவாகப் பணிப்பாளர் எம்.ஏ.ஜமால் முகம்மது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல சமாதான புறாக்கள் விடப்பட்டதுடன் இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பறக்கத் டெக்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.ஐ.ஏ.பரீட் கலந்து சிறப்பித்தார்.

இந்த நிகழ்வில் பிரதம பேச்சாளராக தென்கிழக்குப் பல்கலைக்கழக அரசியல், விஞ்ஞானத்துறைத் தலைவர் கலாநிதி எம்.எம்.பாஸில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்வில் வர்த்தகர்களும், நிறுவன ஊழியர்களும் மற்றும் ஊடகவியலாளர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :